செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் நாள் என்பது | சீனு ராமசாமி

நாள் என்பது | சீனு ராமசாமி

0 minutes read

நாள் என்பது நாளல்ல
பின்பொரு சமயம்
ஏங்கித்
தவிக்கும் நினைவு.

நாட்களை
விதைத்தவர்களுக்கு வறட்சியில்லை.

கண்
தெரியாதவனின் ஊன்றுகோலுக்கு
கண்ணாகுறவன்
பாதங்களில் தைக்க காத்திருக்கும்
முட்களை காலம் எடுத்துவிடும்.

எதாவது ஒரு பருக்கை
எவருக்காவது போகும்படி செய்பவன்
பட்சிகளின் கனவில் வரும் மகாராஜன்.

தெருவில் நின்று
குரல் தெறிக்கத் தரும்
குரலாக அல்ல
அப்படிக் காண்போர்களுக்கு
தரும் ஒரு டம்ளர் தண்ணீர் அதுபோதும் அந்நாளுக்கு

நாட்களில் சேமிக்கப்படும்
எல்லாம்
ஒரு நாள் நம்மை காண விரும்பும்
நாள்.

அது எதுவாகினும்.

சீனு ராமசாமி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More