செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் எனது கிராமம் | பா.உதயன்

எனது கிராமம் | பா.உதயன்

1 minutes read

ஒரு காலம்
உயிரோடு இருந்தது
எனது கிராமம்

எந்தப் பயமும் இல்லாமல்
எப்போதும் ஒரு பூ
பூத்தபடி இருந்தது

யுத்தம் வந்தது
தின்று முடித்தார்கள்
ஆக்கிரமிப்பாளர்கள்
நிலத்தையும் அங்கு பூத்து நின்ற
நம் வாழ்வையும்

இங்கு இப்போ
காவலரண்கழும்
இராணுவ முகாம்களும்
புத்தர் சிலைகளும்
முளைத்திருக்கிறது

ஈ போல் மொய்த்திருக்கிறது
எங்குமே இராணுவம்
இரவை பயப்படுதிக்கொண்டும்
சப்பாத்து சத்தங்கள்
நாய்களை தூங்க விடாமல்
நம் வீட்டுக்கு அருகில் எப்போதுமே

அங்கு வாழ்ந்த மக்கள்
இப்போ அங்கே இல்லை
தனித்து நிற்கின்றன
பனை மரங்கள்
அருகில் இருந்தவனை காணாமல்

மிஞ்சியிருந்த
எம் நிலத்தையும் கடலையும்
எவர் எவருக்கோ
விற்று விட்டார்கள்

நாமும் தானே
விட்டு விட்டு
நாடு நாடாய்
வந்து விட்டோம்

அது தான் அந்த மண்ணுக்கு
ஆத்திரமும் கோபமும்.

பா.உதயன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More