செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் கரும்புலி | கி. அலெக்ஷன் கவிதை

கரும்புலி | கி. அலெக்ஷன் கவிதை

0 minutes read

“சோறூட்ட தாயிருந்தாள்… தலைசாய தமையன் கூடவே இருந்தான். பகிடிக்கு பாட்டன் இருந்தான். பார்த்து மகிழ்ந்திட மணமகளும் இருந்தாள்… ஆயினும் அவனோ… தோளில் வெடிமருந்து சுமந்தான்….

பெண்ணின் பிறப்புறுப்பில் துப்பாக்கிச்சன்னம் பாய்ச்சிய பேரினவாதம்…. அவனை கரும்புலியாக்கியது

தந்தைகண்முன் தன் மகளின் பிறப்புறுப்பை சிதைத்த கண்ணீர்ச்சம்பவம்… அவனை கரும்புலியாக்கியது

தாயின் மார்பை வாழ்கொண்டு விழி பிதுங்க அறுத்தெறிந்த மீளமுடியாத்துயரம்…. அவனை கரும்புலியாக்கியது

விம்மியழுத பிஞ்சுப்பாலனை.. விசமி போல் கொதிக்கும் தாரில் இட்ட சொல்லணாத்துயரம்… அவனை கரும்புலியாக்கியது

பள்ளி சென்ற தமையனை,பாதங்களில் வெடிமருந்து கட்டிக்கொன்ற தீராத்துன்பம்… அவனை கரும்புலியாக்கியது

இனியொரு விதி செய்வோம். இங்கு எவரும் எவருக்கும் தாழ்ந்தவரில்லை என்னும் மதி பகர்வோம்…”மாண்டோர் மீண்டதில்லை… ஆயினும் அவர் மாவீரமும் மான இலட்சியமும் மடிந்ததில்லை…

கடைசித்தமிழன் இப்பூமியில் வாழும்வரை செப்படா…. தமிழரின் தாகம் தமிழீழத்தாயகமென்று….!!

கி.அலெக்ஷன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More