செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் எழுதப்படாத விதிகள் | கேசுதன்

எழுதப்படாத விதிகள் | கேசுதன்

0 minutes read

 

புதைக்கப்பட்ட எம் தோழர்களே உங்கள்
கனவுகள் களவாடியது என்ரீரோ
எழுதப்படாத விதிகளை கடந்து உம்
கனவுகள் காற்றாக எம்
சுவாசமாகியது

காதலித்த களங்கள் உங்கள் பெயர் சொல்லவே
காத்திருக்கு ஒருநாள் தீபங்கள் எரியும் நாள் நாழிகை தப்பாது உங்கள் நாமம் கூறவே என்றிருக்கும்

கார்த்திகை மலர்களும் உங்கள் காலடி பணிய
தவமிருந்து சுவாசிக்கிறது
கார்த்திகை பூக்களை கண்டவுடன் தோன்றும்
உம் கல்லறைகள் வாசம்

செதில் செதிலாக நொறுக்கப்பட்டது கற்களே
தவிர கனவுகளையல்ல
புரியாத புதிர்களாய் சரிந்தது சாபமல்ல
ஓர் சரித்திரம் இனமானம் காக்க போராடி மடிந்த மகத்தான மாவீரன் எங்குண்டு

காரிருள் கானகத்திலும் பகைவன் கதிகலங்கி வாய் பிளந்து சரிந்தான் உன் கைப்பிடி கணை சொல்லும் உன் குறி

நெஞ்சில் எம் இனமானம் காத்திடவும்
களம் கண்ட பெரு மறவரகூட்டம்
உம் கனவுகளை தாங்கியபடி வழிப்போக்கனாய் வாழும் உம்மவர்
எழுதப்படாத விதிகளாய்…!

கேசுதன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More