செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் மாரடைப்பு வராமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன?

மாரடைப்பு வராமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன?

2 minutes read

இருதய நோய் (மாரடைப்பு) உலகின் மிகப்பெரிய உயிர்க்கொல்லி நோயாகும். நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், புகைபிடித்தல், காற்று மாசு ஆகியவற்றால் இருதய நோய் வர வாய்ப்பு உள்ளது. இருதய நோயுடன் வாழும் 520 மில்லியன் மக்களுக்கு கோவிட்-19 கடுமையான இதய பாதிப்பை ஏற்படுத்துகிறது..

இதனால் இருதய நோய் உள்ளவர்கள் வழக்கமான இருதய பரிசோதனை செய்துகொள்ளாமல் அச்சப்பட்டு வீட்டில் தனிமையாக இருக்கின்றனர். சர்க்கரை பானங்கள், பழச்சாறுகளை தவிர்த்து அதற்கு பதிலாக தண்ணீர் அல்லது இனிப்பு சேர்க்கப்படாத பழச்சாறுகளை தேர்வு செய்து ஒரு ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்ற வேண்டும்.

நாள்தோறும் நாம் தேர்வு செய்த சைவ உணவுகள் மொத்த அளவை, 5 பாகங்களாக பிரித்து, அதில் சத்து நிறைந்த காய்கறி மற்றும் பழங்களை சேர்த்து உண்ண வேண்டும். உப்பு நிறைந்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். தினமும் உடற்பயிற்சி குறைந்த பட்சம் 30 நிமிடங்கள் என வாரத்தில் 5 நாட்கள் செய்ய வேண்டும். மேலும் அன்றாட பணிகளில் நாம் சுறுசுறுப்புடன் இயங்க வேண்டும்.

புகை பிடிப்பதையும், புகையிலை பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். இதன் மூலம் உங்கள் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்த நீங்கள் செய்யக்கூடிய ஓர் சிறந்த செயலாகும். புகைப்பிடிப்பதை கைவிட்ட, 2 ஆண்டுகளுக்குள் இருதய நோய் ஏற்படும் அபாயம் கணிசமாக குறைகிறது.

மேலும் 15 ஆண்டுகளுக்கு மேல் புகை பிடிக்காதவர்களுக்கு இருதய நோய் வராது. புகைபிடிப்பதை தவிர்ப்பதன் மூலம், உங்கள் இருதய பிரச்சினைகள் குறைவது மட்டுமின்றி, அருகில் இருக்கும் சக மனிதர்களின் இருதய பிரச்சினைகளும் குறைய வழிவகை செய்யும்.

நன்றி- இருதய நோய் நிபுணர் டாக்டர் கல்யாணராமன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More