செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் எலுமிச்சை வேக வைத்த நீர்

எலுமிச்சை வேக வைத்த நீர்

1 minutes read

எலுமிச்சையின் சாற்றில் மட்டும் சத்துக்கள் இருப்பதில்லை, அதன் தோலிலும் ஏராளமான சத்துக்கள் உள்ளன.

எலுமிச்சையின் தோலில் உள்ள சத்துக்களைப் பெற, எலுமிச்சையை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து அந்நீரைக் குடிக்க வேண்டும்.

இந்த எலுமிச்சை வேக வைத்த நீர் பல நோய்களை எதிர்த்துப் போராடுவதில் பயனுள்ளதாக இருக்கும் என்பது தெரியுமா?

நாம் எலுமிச்சை வேக வைத்த நீரை குடிப்பதால் பெறும் நன்மைகள்

சருமத்தை பளபளப்பாக்கும்

உயர் இரத்த அழுத்தம் குறையும்

நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்

உடல் பருமன் குறையும்

செரிமான மண்டலத்தை மேம்படுத்தும்

சிறுநீரக கல் பிரச்சனை குணமாகும்

எலுமிச்சை வேக வைத்த நீரை எப்போது மற்றும் எப்படி குடிப்பது? எலுமிச்சை நீரை தயாரிப்பதற்கு ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி, அதில் பாதி எலுமிச்சையை வெட்டி போட்டு, சுமார் 5 நிமிடங்கள் கொதிக்க வைத்த பிறகு இறக்கி குளிர வைத்து, தேன் கலந்து குடிக்க வேண்டும்.

இந்த எலுமிச்சை நீரை காலையில் எழுந்ததும் காபி, டீ-க்கு பதிலாக குடிக்கலாம். இருப்பினும், அளவுக்கு அதிகமாக எலுமிச்சை ஜூஸை குடிப்பது சரும அழற்சி மற்றும் அரிப்பை உண்டாக்கும்.

எனவே இந்த பானத்தை தினமும் குடிப்பதாக இருந்தால், மருத்துவரை ஆலோசித்த பின்னர் தொடங்குங்கள்.

நன்றி boldsky

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More