செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பு!

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பு!

1 minutes read

ஆசிரியர்கள், அதிபர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்ப்பதற்கு ஆலோசனைகள் மற்றும் சிபாரிசுகள் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆசிரியர்கள், அதிபர்களின் விடுமுறை தொடர்பாக கல்வி அமைச்சு இன்று (வியாழக்கிழமை) ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், “ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உள்ளிட்ட அரசாங்கத்தின் அனைத்து ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அரச சேவைகள் சம்பள முரண்பாட்டை நீக்கும் குழுவின் சிபாரிசை அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைப்படுத்துவதற்கு தயாராக உள்ள நிலையில், தமது சம்பள முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்ட ஆசிரியர்களும் அதிபர்களும் சுகயீன விடுமுறையில் சேவைக்கு சமூகமளிக்காமை பெரும் அநீதியான செயற்பாடாகும்.

தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஊழியர்களுக்குள்ள உரிமையாகும். அதற்கு சவால் விடுக்கப்படவில்லை. எனினும் தொழிற்சங்கங்களின் சந்தர்ப்பவாத செயற்பாடுகளில் ஏமாறுகின்றமை ஆசிரியர், அதிபர்கள் போன்ற புத்திசாலிமிக்க கௌரவமான தொழிலுக்கு ஏற்புடைய செயற்பாடு அல்ல.

அதிபர்களுக்கான கொடுப்பனவு 650 ரூபாயில் இருந்து 6,500 ரூபாய் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு தொடக்கம் தாமதப்பட்டிருந்த பதவி உயர்வு பணிகள் தற்பொழுது முறையாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்வதற்கு இடம்பெறவேண்டிய முறையை தயாரித்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதிபர் சேவையை அரசியலில் இருந்து மீட்டெடுத்து அந்த சேவையில் அதிபர் தரத்தில் நிலவிய குறைபாடுகளை தீர்ப்பதற்காக போட்டிப்பரீட்சை நடத்தப்பட்டு சுமார் 6,000 பேர் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

ஆசிரியர் மற்றும் அதிபர்களுக்கு வெளிநாடுகளில் பயிற்சிக்கான சந்தர்ப்பம் பெற்றுக்கொடுக்கப்பட்டமை, ஆசிரியர் சேவையில் 25,000 பேர் இணைத்துக்கொள்ளப்பட்டமை முதலான நடவடிக்கைகள் கடந்த நான்கரை வருட காலப்பகுதியில் அதாவது குறுகிய காலப்பகுயில் நிறைவேற்றப்பட்டன. இவை கல்வித்துறையில் மனிதவள அபிவிருத்தியின் நோக்கமாக முன்னெடுக்கப்பட்டன” என்று கல்வி அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More