செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பிரேசிலில் இயல்பு நிலைக்கு திரும்ப 6 மாதமாகும் – பிரேசில் ஜனாதிபதி

பிரேசிலில் இயல்பு நிலைக்கு திரும்ப 6 மாதமாகும் – பிரேசில் ஜனாதிபதி

1 minutes read
கொரோனா வைரஸால் சர்வதேச அளவில் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகள் இந்த பாதிப்பிலிருந்து மீண்டுவர முடியாமல் தவித்து வருகின்றன. அந்தவகையில் பிரேசில் நாடு இயல்பு நிலைக்கு திரும்ப 6 மாதங்கள் ஆகும் என பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் பொல்சனரோ ( Jair Bolsonaro ) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக  உரையாற்றும்போது அவர் கூறுகையில்:-
கொரோனா வைரஸின் உச்சக்கட்ட தாக்குதல் 3 அல்லது 4 மாதங்களில்தான் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம். இதனால் 6 அல்லது 7 மாதங்களில் பிரேசில் நாடே இயல்பு நிலைக்கு திரும்பும்’ என்று கூறினார்.
பிரேசிலில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தவர் எண்ணிக்கை 11 ஆகவும், தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 957 பேராகவும் உள்ளது.

வணக்கம் லண்டனுக்காக

ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More