செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இரு வாரங்களுக்கு பேருந்துகள், ரயில்கள் இல்லை! அரசு அறிவிப்பு

இரு வாரங்களுக்கு பேருந்துகள், ரயில்கள் இல்லை! அரசு அறிவிப்பு

1 minutes read

இலங்கையில் நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு பொதுப் போக்குவரத்துக்களை மேற்கொள்ளப் போவதில்லை என்று போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

இரு வாரங்களுக்கு பொதுப் போக்குவரத்தினை மேற்கொள்ள வேண்டாம் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க முன்வைத்த பரிந்துரைக்கு அமைய இந்த நடவக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் அரச மற்றும் தனியார் ஊழியர்களின் போக்குவரத்துக்கள் மட்டும் இடம்பெறும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டம் நாளை முதல் தளர்த்தப்படும் என்று அறிவிகப்பட்டுள்ள நிலையில் பொது மக்கள் அவசியமற்ற முறையில் பொது போக்குவரத்துகளை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எனினும் அனுமதிக்கப்பட்டுள்ள அரச ஊழியர்கள் ரயில் மற்றும் பேருந்துகளில் பயணிக்கும் போது முகக் கவசம் அணிதல், ஒரு மீற்றர் தூர இடைவெளி கடைபிடித்தல், வீதிகளில் எச்சில் துப்புவதனை தவிர்த்தல், தும்மும் போது அல்லது இருமலின் போது முகத்தை மூடிக் கொள்ள வேண்டும், பேருந்து மற்றும் ரயில்களில் உள்ள கைப்பிடிகள் பிடிப்பதனை முடிந்தளவு தவிர்த்தல், அப்படி பிடித்தால் உடனடியாக கைகளை கழுவுதல் போன்ற சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ரயில்களில் சட்டங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதற்கமைய ரயில்களில் எச்சில் துப்புதல் அல்லது ரயில் வீதிகளில் எச்சில் துப்புவது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More