செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

1 minutes read

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மீளத் திறப்பதற்கும் அனைத்துத் தரங்களினதும் மாணவர்களுக்கும் வகுப்புகளை நடத்துவதற்கும் கல்வி அமைச்சு இன்று (புதன்கிழமை) அனுமதி வழங்கியுள்ளது.

வகுப்பறைகளில் தேவையான வசதிகளுடன் இருந்தால் சமூக இடைவெளியினை பேண முடியுமானதாக இருந்தால் அனைத்து பாடசாலைகளையும் திறந்து கல்வி நடவடிக்கையை முன்னெடுக்கலாம் என கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

200 பேருக்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட, 01 மீட்டர் இடைவௌியைப் பேணக்கூடிய வகையில் கடந்த 10 ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

எனினும், 200 பேருக்கும் அதிக மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளில் ஆரம்பநிலை, இடைநிலை வகுப்புகளுக்கு அமைய வார நாட்களின் அடிப்படையில் கல்வி செயற்பாடுகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டது.

அதற்கமைய, ஐந்தாம் தர மாணவர்களுக்கு திங்கள் தொடக்கம் வௌ்ளி வரை அனைத்து நாட்களிலும் கற்றல் செயற்பாடுகள் இடம்பெறும் அத்தோடு பிரதி திங்கட்கிழமைகளில் 01 ஆம் தர மாணவர்களுக்கும் பிரதி செவ்வாய்க்கிழமைகளில் 02 ஆம் தர மாணவர்களுக்கும் பிரதி புதன் கிழமைகளில் 03 ஆம் தர மாணவர்களுக்கும் வியாழன் மற்றும் வௌ்ளிக்கிழமைகளில் 04 ஆம் தர மாணவர்களுக்கும் பாடசாலைகளில் கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

01 ஆம் 02 ஆம் 03 ஆம் தர மாணவர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் மாத்திரமே பாடசாலை கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More