செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் “ஃபுட்போல் ஃப்ரைடே”!

“ஃபுட்போல் ஃப்ரைடே”!

1 minutes read

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் “ஜெயகமு” நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இரண்டாவது விளையாட்டு நிகழ்ச்சித்தொடர் “ஃபுட்போல் ஃப்ரைடே” ஆகும்.  

இந்த கொரோனா பேரிடர் காலத்தில் மக்கள் ஆரோக்கியமாகவும் உற்சாகமாகவும் இருப்பதற்காகவும் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சும் இலங்கை தொழில்முறை விளையாட்டு அமைப்பும் இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனமும் இணைந்து இந்த நிகழ்ச்சித்திட்டத்தை வடிவமைத்துள்ளனர்.

எதிர்வரும் 19ம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பு ‘ரேஸ் கோர்ஸ்’ காற்பந்தாட்ட திடலில் மாலை 6 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த நிகழ்வு நள்ளிரவு 12 மணி வரை இடம்பெறவுள்ளதோடு கொரோனா பாதுகாப்பு விதிகளை கருத்திற்கொண்டு அணிக்கு 6 பேர் கொண்ட மினி காற்பந்தாட்ட தொடராக நடைபெறவுள்ளது.

இந்த தொடரில் குடும்பமாகவோ, நண்பர்களாகவோ பங்குபற்ற முடியும் என்பதோடு உணவுச் சாலைகள், களியாட்ட நிகழ்வுகள் என பலவகையான சுவாரஷ்யங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More