செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் முன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு பின்னர் தற்கொலை

முன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு பின்னர் தற்கொலை

1 minutes read

முன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் ஜோன் கெடெர்ட், பாலியல் வன்கொடுமை மற்றும் மனித கடத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளான சில மணிநேரங்களுக்குப் பிறகு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மிச்சிகன் மாநில சட்டமா அதிபர் டானா நெசலின் அலுவலகம் வியாழக்கிழமை பிற்பகல் கெடெர்டின் மரணத்தை உறுதிப்படுத்தியது.

அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற ஆவணங்களின்படி, கெடெர்ட்டில் 20 மனித கடத்தல், முதல் நிலை பாலியல் வன்கொடுமை, இரண்டாம் நிலை பாலியல் வன்கொடுமை, குற்றவியல் தொழில் மற்றும் ஒரு பொலிஸ் அதிகாரியிடம் பொய் சொன்னது போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

கெடெர்ட்டின் தனது உயிரை மாய்த்துக் கொண்ட பின்னர் வியாழக்கிழமை பிற்பகல் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக சட்டமா அதிபர் அலுவலகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

2012 லண்டனில் நடந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ‘ஃபியர்ஸ் ஃபைவ்’ என அழைக்கப்படும் பெண்கள் அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார்.

கெடெர்ட் 2012 இல் பெண்கள் ஜிம்னாஸ்டிக்ஸ் அணியின் தலைவராக இருந்தார் மற்றும் நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்களை துஷ்பிரயோகம் செய்த அணி மருத்துவர் லொறி நாசருடன் நெருக்கமாக பணியாற்றினார்.

250 க்கும் மேற்பட்ட சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்ததற்காக நாசருக்கு 2018 இல் 300 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More