செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு ஆயுத கலாசார்தை கற்றுக் கொடுத்தவர்கள் ஜே.வி.பி.யினர் | ராஜித

வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு ஆயுத கலாசார்தை கற்றுக் கொடுத்தவர்கள் ஜே.வி.பி.யினர் | ராஜித

1 minutes read

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு ஆயுத கலாசார்தை கற்றுக் கொடுத்தவர்கள் ஜே.வி.பி.யினர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ராஜித சேனாரட்ன இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இரண்டு பிரதான கட்சிகளும் நாட்டுக்கு எதனையும் செய்யவில்லை என ஜே.வி.பி சுமத்தி வரும் குற்றச்சாட்டு குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்…

1971ம் ஆண்டு இந்த நாட்டுக்கு ஆயுத கலாச்சாரத்தை அறிமுகம் செய்தவர்கள் யார்? ஐக்கிய தேசியக் கட்சியும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அதனைச் செய்யவில்லை. இந்த ஆயுதக் கலாச்சாரத்தையே பின்னர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கற்றுக்கொண்டார்.

1989ம் ஆண்டில் ஜே.வி.பி இந்த நாட்டுக்கு மீண்டும் பாரிய அழிவினை ஏற்படுத்தியது. இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய அழிவுகளைள ஏற்படுத்திய தரப்பே இந்த ஜே.வி.பியாகும்.

அபிவிருத்தி அடைந்த நாடுகளை விடவும் இலங்கையில் பல்வேறு சேவைகள் மக்களுக்கு வழங்கப்படுகின்றது. எனவே ஜே.வி.பி. குற்றச்சாட்டுக்கள் அர்த்தமற்றவை என ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More