செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கையிருப்பு இல்லாமையே காரணம்

கையிருப்பு இல்லாமையே காரணம்

1 minutes read

எரிவாயு கையிருப்பு இல்லாமை காரணமாக எதிர்வரும் 25ஆம் திகதி வரை சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க முடியாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

லிட்ரோ நிறுவனம் ஏப்ரல் 12ஆம் திகதி முதல் சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு  வழங்குவதை நிறுத்தி வைத்தது.

இம்மாதம் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் 3,600 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடையும் என்றும் அதன் பின்னர் விநியோக நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும் என்றும் லிட்ரோவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள் மற்றும் தகனசாலைகள் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கான எரிவாயு விநியோகம் தொடரும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More