செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா 50 ஆண்டுகளுக்கு பிறகு நிலவுக்கு செல்லும் நால்வரின் பெயர்களை வெளியிட்டது நாசா

50 ஆண்டுகளுக்கு பிறகு நிலவுக்கு செல்லும் நால்வரின் பெயர்களை வெளியிட்டது நாசா

0 minutes read

50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா.

ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் மூலம் முதற்கட்ட சோதனை முயற்சியாக ஆர்ட்டெமிஸ் 1 ஆளில்லா விண்கலத்தை நாசா வெற்றிகரமாக அனுப்பியது.

இந்த நிலையில், ஆர்ட்டெமிஸ்-2 ராக்கெட் ஏவும் திட்டத்தை நாசா ஆரம்பித்துள்ளது. இதில் நிலவுக்கு செல்ல உள்ள 3 விண்வெளி வீரர்களின் பெயர்களை நாசா வெளியிட்டுள்ளது.

ஜெர்மி ஹேன்சன், விக்டர் க்ளோவர், ரீட் வைஸ்மேன், கிறிஸ்டினா ஹம்மக் கோச் ஆகியோர் நிலவுக்கு செல்லவுள்ளனர்.

அவர்களில் 3 அமெரிக்கர்கள் மற்றும் ஒரு கனடா விண்வெளி ஏஜென்சி வீரர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த திட்டத்தில் முதல் முறையாக பெண் விண்வெளி விராங்கனை கிறிஸ்டினா ஹம்மக் கோச் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More