அந்தமான் நிக்கோபர் தீவில் இன்று (10) காலை இரண்டு முறை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.9 மற்றும் 4.6 ஆக பதிவானது. அதிகாலை 2.26 மணி அளவில் கேம்பெல் பே என்ற இடத்திலிருந்து 220 கி.மீ தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது
அடுத்தடுத்து நில நடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
நேற்று ஒரே நாளில் நான்கு முறை நில அதிர்வுகள் உணரப்பட்ட நிலையில், மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நேற்று அதிகபட்சமாக ரிக்டர் அளவில் 5.5-ஆக நிலநடுக்கம் பதிவானது குறிப்பிடத்தக்கது.