செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வலைக்குள் சிக்குண்டு 3 பிள்ளைகளின் தந்தையான மீனவர் பலி

வலைக்குள் சிக்குண்டு 3 பிள்ளைகளின் தந்தையான மீனவர் பலி

1 minutes read

மீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் வலைக்குள் சிக்கி மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு – சந்திவெளி ஆற்றில் நேற்றிரவு (12) மீன்பிடிக்கச் சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தையான சந்திவெளி, வட்டையார் வீதியைச் 43 வயதுடைய கந்தையா பவானந்தன் என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

மீன்பிடிக்க சென்ற நபரை காணவில்லை என்று இன்று (13) காலை அவரது பிள்ளைகள் தோணியொன்றில் சென்று தேடியபோது, தோணியிலிருந்து வலை வீசும் போது தவறி விழுந்து வலைக்குள் சிக்குண்டு அதிலிருந்து மீளமுடியாமல் நீரில் மூழ்கி மரணமடைந்திருப்பதை கண்டுள்ளனர்.

பிள்ளைகள் இருவரும் தந்தையின் சடலத்தை கரைக்கு கொண்டுவந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக சந்திவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுகோளை ஏற்று சம்பவ இடத்துக்கு சென்ற மரணவிசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் விசாரணைகளை முன்னெடுத்து பிரேத பரிசோனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை கொண்டு செல்ல பொலிஸாரை பணித்தார்.

பிரேத பரிசோனையின் பின்னர் சடலம் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More