செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா விவாகரத்துக்கு 6 மாத காத்திருப்பு தேவையில்லை; வெளியான உத்தரவு

விவாகரத்துக்கு 6 மாத காத்திருப்பு தேவையில்லை; வெளியான உத்தரவு

0 minutes read

திருமண உறவு மேம்பட வழியில்லாத நிலையில், 6 மாத காத்திருப்பு தேவை இல்லை என்றும் உடனடியாக விவாகரத்து வழங்கலாம் என இந்திய உயர்நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கூறி உள்ளது.

நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, ஏஎஸ் ஓகா, விக்ரம் நாத் மற்றும் ஜேகே மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு இதனை தெரிவித்துள்ளது.

143 வது பிரிவின் கீழ் திருமண உறவு மேம்படவே வழியில்லாத நிலையில், 6 மாத காத்திருப்பு தேவையே இல்லை என்றும் திருமணத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரலாம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், அரசியலமைப்பின் 142 வது பிரிவின் கீழ் முழுமையான நீதியை வழங்க அதன் அசாதாரண அதிகாரங்களைப் பயன்படுத்தலாம் மற்றும் திருமண பந்ததை மீட்க முடியாத முறிவு உள்ள அடிப்படையில் விவாகாரத்தை உடனடியாக வழங்கலாம் என்று கூறியது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More