செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் துருக்கி ஜனாதிபதி தேர்தல்: 2ஆவது சுற்று வாக்கெடுப்பு நடத்த தீர்மானம்

துருக்கி ஜனாதிபதி தேர்தல்: 2ஆவது சுற்று வாக்கெடுப்பு நடத்த தீர்மானம்

1 minutes read

துருக்கி ஜனாதிபதி தேர்தலில் எந்த கட்சியும் பெரும்பான்மை பெறாததால் 28ஆம் திகதி 2ஆவது சுற்று வாக்கெடுப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கியில் 2003ஆம் ஆண்டு முதல் தற்போதைய ஜனாதிபதி தாயீப் எர்டோகன் ஆட்சி செய்து வருகிறார்.

2003ம் ஆண்டு துருக்கி பிரதமரான எர்டோகன் 2014 ஓகஸ்ட் வரை வரை பிரதமராக செயல்பட்டார்.

பின்னர், துருக்கியில் பிரதமர் பதவி கலைக்கப்பட்டு உச்சபட்ச அதிகாரமாக ஜனாதிபதி பதவி கொண்டுவரப்பட்டது.

இதையடுத்து 2014 ஆகஸ்ட் மாதம் எர்டோகன் துருக்கி ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது முதல் கடந்த 9 ஆண்டுகளாக எர்டோகன் துருக்கி ஜனாதிபதியாக செயல்பட்டு வருகிறார்.

ஒட்டுமொத்த அதிகாரமும் தன்வசம் கொண்டுள்ள எர்டோகன் சர்வாதிகாரியாக அறியப்படுகிறார்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் அங்கு ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது.

இதில் தற்போதைய ஜனாதிபதி எர்டோகனும், எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் கெமால் கிலிக்டரோக்லுவும் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் மொத்தம் 91 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில் ஜனாதிபதி எர்டோகன் சுமார் 49.50 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளார். எதிர்க்கட்சி சார்பில் போட்டியிட்ட கெமால் கிலிக்டரோக்லு 44.79 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளார்.

துருக்கியை பொறுத்தவரை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற வேண்டும். ஆனால் எவரும் பெறாததால் வருகிற ஜனாதிபதி தேர்தலின் 2ஆவது சுற்று நடைபெறும் என அந்த நாட்டின் தேர்தல் ஆணைக்குவின் தலைவர் அஹ்மத் யெனர் அறிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More