செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் உயிர்த் திரியில் தீ மூட்டி | பா.உதயன்

உயிர்த் திரியில் தீ மூட்டி | பா.உதயன்

0 minutes read

 

சிவப்பாய்
சிதறிக் கிடக்கின்றன
சுவர்களில்
இவனின் கனவுச் சிதறல்கள்

உயிரோடு எரிந்தழிந்த வீரமாய்
விடைபெற்றுச் சென்றது
வீரனின் வரலாறு

இருந்தாலும்
யுகங்கள் கழிந்தாலும்
உலகச்சக்கரம்
தர்மத்தின் வழியில்
சுற்றாது விடினும்
தவம் கிடந்த கல்லறைகளில்
தர்மம் ஒரு நாள்
வெல்லத்தானே வேண்டும்

பிய்த்து எறியப்பட்ட
கல்லறைகளின் குருதியில்
உயிர்த் திரியில் தீமூட்டி
உன் முகம் தேடுகின்றேன்

காலப் பெருவெளியில் கிடக்கும்
கல்லறைகளில் தீ மூட்டி
கனவுகளைத் தேடுகின்றேன்

என் மூதாதையினன்
விட்டுச் சென்ற
முடிவில்லா வரலாற்றின்
நந்திக் கடலிருந்து
நாளைய வரலாற்றை தேடுகின்றேன்

அதுவே எனது அடையாளம்
அதுவே எனது வாழ்வு
அதுவே எனது விடுதலை

பா.உதயன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More