செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சர்ச்சைக்குரிய போதகர்களுடன் எனக்குத் தொடர்பு இல்லை! – மஹிந்த பதில்

சர்ச்சைக்குரிய போதகர்களுடன் எனக்குத் தொடர்பு இல்லை! – மஹிந்த பதில்

0 minutes read

“ஜெரோம் பெர்னாண்டோ மற்றும் உபேர்ட் ஏஞ்சல் ஆகிய போதகர்களை ஒருமுறைதான் சந்தித்துள்ளேன். அவர்களுடன் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை.”

– இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

குறித்த போதகர்களுடன் மஹிந்த ராஐபக்சவுக்குத் தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜெரோம் பெர்னாண்டோவின் காரியாலயத்தால் கோரிக்கை விடுக்கப்பட்டதன் காரணமாகவே அவர்களை நான் ஒருமுறை சந்தித்தேன்.

பௌத்தம் மற்றும் ஏனைய மதங்கள் தொடர்பில் ஜெரோம் பெர்னாண்டோ வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துகளை நான் கண்டிக்கின்றேன்.

இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை அல்லது வெறுப்பை ஏற்படுத்தும் இவ்வாறான கருத்துக்களுக்கு எமது நாட்டில் இடமில்லை.

உத்தியோகபூர்வ சந்திப்பு என்பதால் புகைப்படங்கள் ஊடகங்கள் வெளியிடப்பட்டன. அதைத் தவிர அவர்களுடன் எனக்குத் தனிப்பட்ட உறவு இல்லை.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More