செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் உக்ரைன் மீது புட்டினின் இராணுவம் நடத்திய தாக்குதலில் பத்து பேர் பலி

உக்ரைன் மீது புட்டினின் இராணுவம் நடத்திய தாக்குதலில் பத்து பேர் பலி

0 minutes read

உக்ரைன் நகரமான க்ரிவி ரிஹ் மீது புட்டினின் இராணுவம் நடத்திய தாக்குதலில் குறைந்தது பத்து பேர் கொல்லப்பட்டனர்

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் சொந்த ஊரான க்ரிவி ரிஹில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் மற்றும் கிடங்கின் மீது செவ்வாய்க்கிழமை ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதலில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நான்கு பேர் அடுக்குமாடி குடியிருப்பிலும், ஆறு பேர் கிடங்கிலும் கொல்லப்பட்டதாக பிராந்திய ஆளுநர் செர்ஹி லிசாக் தெரிவித்தார்.

மேயர் ஒலெக்சாண்டர் வில்குல் கூறுகையில், ஒருவர் இன்னும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருப்பதாகவும், 28 பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார்.

மத்திய உக்ரேனிய நகரத்தின் மீது அதிகாலை தாக்குதலுக்குப் பிறகு, எரிந்த அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதிக்கு வெளியே குடியிருப்பாளர்கள் கதறி அழுதனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More