செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நாட்டை மீட்கச் சம்பந்தன், மனோ கட்சிகளின் ஆதரவு அவசியம்! – வஜிர சுட்டிக்காட்டு

நாட்டை மீட்கச் சம்பந்தன், மனோ கட்சிகளின் ஆதரவு அவசியம்! – வஜிர சுட்டிக்காட்டு

0 minutes read

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்குக் கூட்டணி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளினதும் முழு ஆதரவு மிகவும் அவசியம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

“நிலையானதொரு தேசிய வேலைத்திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உருவாக்கியுள்ளார். 2048 ஆம் ஆண்டு வரை அந்த வேலைத்திட்டத்துடன் பயணிக்குமாறு ஜனாதிபதி கூறியுள்ளார்.

எனவே, பொருளாதார சமரில் வெல்வதற்கு எமக்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட இந்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளினதும் முழு ஆதரவு மிகவும் அவசியம்.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More