செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நல்லூரில் சிதறுதேங்காய் அடித்து மைத்திரி வழிபாடு!

நல்லூரில் சிதறுதேங்காய் அடித்து மைத்திரி வழிபாடு!

1 minutes read

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிதறுதேங்காய் அடித்து வழிபாடுகளில் ஈடுபட்டார்.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இன்று காலை நல்லூர் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.

சைவ பண்பாட்டுடன் வேட்டி அணிந்து வந்த மைத்திரிபால சிறிசேன சிதறுதேங்காய் அடித்து வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன, மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹாம் சிறிசேன உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

வழிபாட்டுக்குப் பின்னர் ஆலயச் சூழலில் நின்ற முன்பள்ளி குழந்தைகள், வெளிநாட்டவர்களுடன் கலந்துரையாடலிலும் மைத்திரிபால ஈடுபட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அழைப்பின் பெயரில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள மைத்திரிபால சிறிசேன, இன்று முதல் மூன்று நாட்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து பல்வேறு பொது நிகழ்வுகளிலும், சந்திப்புக்களிலும் ஈடுபடவுள்ளார்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More