செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அம்பாறையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 28 பேர் கைது!

அம்பாறையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 28 பேர் கைது!

0 minutes read

நீண்ட காலமாகச் சூதாட்டத்தில் ஈடுபட்ட 28 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம், பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பு இந்து மயானம் அருகில் உள்ள வெற்றுக்காணிகளில் தினமும் பணத்துக்காகச் சட்டவிரோதமாக ஒன்றுகூடி சூதாட்ட நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர் என்று பொதுமக்களிடம் இருந்து பொலிஸாருக்குத் தகவல் கிடைக்கப்பெற்றிருந்தது.

குறித்த முறைப்பாட்டுக்கமைய பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்கவின் வழிநடத்தலில் பொலிஸார் நேற்று (09) மாலை சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்து 28 சந்தேகநபர்களைக் கைது செய்தனர்.

சட்டவிரோதமாக ஒன்றுகூடி பல்வேறு சூதாட்டத்தில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைதான அனைவர் மீதும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் அவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

நாளைமறுதினம் (12) புதன்கிழமை 28 சந்தேகநபர்களுக்கு நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளனர் என்று பெரியநீலாவணை பொலிஸார் தெரிவித்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More