செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கொள்கலனுடன் பஸ் மோதி இருவர் சாவு! – 29 பேர் காயம்

கொள்கலனுடன் பஸ் மோதி இருவர் சாவு! – 29 பேர் காயம்

0 minutes read

வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 29 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து பாதெனிய – அனுராதபுரம் வீதியின் அம்பன்பொல பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

பாதெனியவில் இருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த பஸ், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலனுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

தலாவ பகுதியைச் சேர்ந்த 32 மற்றும் 71 வயதான இருவரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இதன்போது காயமடைந்தவர்களில் 6 பெண்களும், ஆண் ஒருவரும் அம்பன்பொல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும் 18 பெண்களும் 4 ஆண்களும் கல்கமுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More