சீக்கிய மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் பாடசாலைக்கு கத்தியை எடுத்து செல்ல ஆஸ்திரேலியா அனுமதி அளித்துள்ளது.
குயின்ஸ்லாந்து மாகாணத்தில் பாடசாலைக்கு சீக்கிய மாணவர்கள் கிர்பான் எனும் கத்தியை கொண்டு செல்வதற்கு அரசாங்கம் தடை விதித்தது.
இதனையடுத்து, கிர்பானை எடுத்து செல்வது தங்களது மத அடையாளங்களில் ஒன்று எனவும், இந்த தடையானது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது எனவும் கோரி அங்குள்ள உச்ச நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
இது தொடர்பான வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் அதன் தீர்ப்பு வெளியானது.
இதில், அரசின் இந்த நடவடிக்கை பாரபட்சமானது என்று கூறிய உச்ச நீதிமன்றம் இந்த தடையை ரத்து செய்து உத்தரவிட்டது.
அதேசமயம் மைதானத்தில் கிர்பானை எடுத்து செல்வதை தடை செய்யும் பாடசாலை உரிமையை இது பாதிக்காது என நீதிமன்றம் கூறியது.
இந்த தீர்ப்பின் தாக்கங்களை பரிசீலிப்பதாக குயின்ஸ்லாந்து மாகாண கல்வித்துறை கூறி உள்ளது.