செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் சோமாலிய இராணுவத்தினரால் 23 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

சோமாலிய இராணுவத்தினரால் 23 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

0 minutes read

சோமாலியாவில் 23 பயங்கரவாதிகளை அந்நாட்டு இராணுவம் சுட்டுக் கொன்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சோமாலியாவில் அல்-ஷபாப் பயங்கரவாதிகள் அரசாங்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். எனவே அவர்களை ஒழிப்பதற்கு இராணுவ வீரர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி வளைகுடா பகுதியான புலா-புலே அருகே ரோந்து சென்றபோது பயங்கரவாதிகள் முகாமிட்டு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து இராணுவத்தினர் அங்கு சுற்றி வளைத்து சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் அல்-ஷபாப் அமைப்பை சேர்ந்த 23 பயங்கரவாதிகள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.

அதன்பிறகு வெடிகுண்டு, கைத்துப்பாக்கி போன்ற பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு அவர்களது முகாம்களை அழித்ததாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More