கொலம்பியாவில் உள்ள கெலோவ்னா நகரில் காட்டுத் தீ தொடர்ந்து பரவி வருவதால் அங்கு வசித்து வரும் சுமார் 30,000க்கும் அதிகமான மக்களை, தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இங்கு நிலைமை மிகவும் மோசமாக மாறிவருகின்றது என்றும், தற்போது சுமார் 30,000 பேரை வெளியேற்றும் உத்தரவை அமுல்படுத்துவதுடன், மேலும் 36,000 பேர் வெளியேற்றப்படும் நிலையில் உள்ளதாக பிரிட்டிஷ் கொலம்பியாவின் அவசரகால மேலாண்மை அமைச்சர் போவின் மா கூறியுள்ளார்.
சுமார் 1,50,000 பேர் வசிக்கும் நகரமான கெலோவ்னாவில், மில்லியன் கணக்கான ஏக்கர்களை எரித்து சாம்பலாகியுள்ளகாட்டுத்தீ, கனடா முழுவதும் பரவி வருகின்றது.
இதனால் ஏற்படும் அடர்ந்த புகை மண்டலத்தால் மக்கள் பலர் மூச்சு திணறலுக்கு ஆளாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.