செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கஜேந்திரன் மீதான தாக்குதல்: நீதியான விசாரணை வேண்டும்! – செல்வம் கோரிக்கை

கஜேந்திரன் மீதான தாக்குதல்: நீதியான விசாரணை வேண்டும்! – செல்வம் கோரிக்கை

0 minutes read

திருகோணமலையில் பொலிஸார் முன்னிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் முறையான நீதி விசாரணை அவசியம் என்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வின்போது உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், இந்தக் கோரிக்கையை விடுத்தார்.

“சக நாடாளுமன்ற உறுப்பினரான உத்திக பிரேமரத்ன துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திலிருந்து உயிர் தப்பியுள்ளார். அதேவேளை, திருகோணமலையில் சக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தாக்கப்பட்டு உயிர்  அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளார். இவ்விரு சம்பவங்கள் தொடர்பாக முறையான நீதி விசாரணை மேற்கொள்ளப்பட்ட வேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கின்றேன்” – என்று  செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. மேலும் கூறினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More