செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் முதல் முறையாக நிலத்துக்கு கீழ் பாடசாலையை அமைக்கும் உக்ரேன்

முதல் முறையாக நிலத்துக்கு கீழ் பாடசாலையை அமைக்கும் உக்ரேன்

0 minutes read

உக்ரேனின் கிழக்கிலுள்ள கார்கிவ் நகரில் முதல் நிலத்தடிப் பாடசாலை அமைக்கப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரேன் மீது ரஷ்யா அடிக்கடி நடத்தும் வெடிகுண்டு, ஏவுகணைத் தாக்குதல்களிலிருந்து மாணவர்களைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நகரத்தின் மேயர் கூறியுள்ளார்.

நிலத்தடிப் பாடசாலை இருந்தால் ஏவுகணைத் தாக்குதல்களின்போதும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதுகாப்பாக நேரடிக் கல்வியைத் தொடரமுடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரேனில் போரினால் நிறையப் பாடசாலை இணையம்வழி கல்வியைக் கற்றுக்கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன.

கடந்த செப்டம்பர் முதலாம் திகதி உக்ரேனில் புதிய கல்வி ஆண்டு தொடங்கியது. அதற்காகப் பல்வேறு ரயில் நிலையங்களில் 60 வகுப்புகள் அமைக்கப்பட்டு 1,000க்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பயிலும் வசதி ஏற்படுத்தப்பட்டது.

போரில் இதுவரை 363 கல்வி நிலையங்கள் முற்றாக அழிந்துள்ளன. சுமார் 3,800 நிலையங்கள் சேதமடைந்துள்ளதாக உக்ரேன் கல்வி அமைச்சு கூறியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More