செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் காசா வைத்தியசாலை மீதான தாக்குதலில் 500 பேர் பலி; 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

காசா வைத்தியசாலை மீதான தாக்குதலில் 500 பேர் பலி; 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

1 minutes read

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன போரில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில், காசாவில் உள்ள அல் அரபு வைத்தியசாலை மீது நடத்திய இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அல்-அஹ்லி மருத்துவமனையின் புகைப்படங்கள், உடைந்த கண்ணாடி மற்றும் உடல் பாகங்கள் உள்ளிட்ட புகைப்படங்களை வெளியிட்டு 500 பேர் கொல்லப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இங்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இடைவிடாத தாக்குதல்களில் இருந்து மருத்துவ சிகிச்சையை பெற்று வருகின்றனர். தாக்குதலில் நடத்தப்பட்ட மருத்துவமனை குழந்தைகள் நிறைந்த வைத்தியசாலை என்பது குறிப்பிடத்தக்கது.

வைத்தியசாலை மீதான தாக்குதலுக்கு கனடா, கத்தார், எகிப்து போன்ற நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது. அதேபோல் இஸ்ரேலில் உள்ள கிறிஸ்தவ மதபோதகர்களும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு பாலத்தீன ஜனாதிபதி முகமது அப்பாஸ் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More