செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் தாய் பரிதாப மரணம்!

கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் தாய் பரிதாப மரணம்!

0 minutes read

வயிற்றுக்குத்தால் பாதிக்கப்பட்ட இளம் தாய் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி, தர்மபுரத்தைச் சேர்ந்த இரண்டரை வயது குழந்தையின் தாயான இந்துஜன் பானுசா (வயது 20) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அந்த இளம் தாய்க்கு வயிற்றுக்குத்து ஏற்பட்டதையடுத்து யாழ். போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு சேர்க்கப்பட்டிருந்தார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார். இதையடுத்து இடம்பெற்ற பிரேத பரிசோதனைக்குப் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More