செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா பயங்கரவாதிகளின் தாக்குதலில் 7 பேர் பலி, 150 பேர் கடத்தல்

பயங்கரவாதிகளின் தாக்குதலில் 7 பேர் பலி, 150 பேர் கடத்தல்

0 minutes read

நைஜீரியா நாட்டில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.

அத்துடன், கொள்ளை, கொலை, பணத்துக்காக பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் கால்நடைகளை கடத்தும் செயலில் ஈடுபடும் ‘பண்டிட்ஸ்’ என்ற கும்பல்களும் செயல்பட்டு வருகிறன.

இதனால், இந்த பண்டிட்ஸ் கடத்தல் கும்பலை நைஜீரியா பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில், நைஜீரியாவின் நைஜர் மாகாணம் முன்யா நகரில் உள்ள கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பண்டிட்ஸ் பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் நுழைந்தனர்.

அதன்போது, கிராமத்தில் இருந்த உணவு பொருட்கள், பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்த பயங்கரவாத கும்பல் தடுக்க முயன்ற கிராமத்தினர் 3 பேர், அரச ஆதரவு பெற்ற ஆயுதக்குழுவினர் 4 பேர் என மொத்தம் 7 பேரை கொலை செய்துள்ளனர்.

அத்துடன், கிராம மக்கள் 150 பேரை பயங்கரவாதிகள் கடத்தி சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தை அடுத்து, அந்த கிராமத்திற்கு சென்ற பாதுகாப்புப்படையினர் கடத்தப்பட்ட கிராமவாசிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More