செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை போல் சத்தியநேசன் காலமானார்!

போல் சத்தியநேசன் காலமானார்!

1 minutes read
யாழ்ப்பாணம் – உரும்பிராயைச் சேர்ந்தவரும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) நீண்டகால உறுப்பினரும் முன்னாள் ஐக்கிய இராச்சியக் கிளையின் பொறுப்பாளரும் இலண்டன் – நியூஹாம் பகுதியின் முன்னாள் கவுன்சிலருமான போல் சத்தியநேசன் இன்று இலண்டனில் காலமானார்.
யாழ். பரியோவான் கல்லூரியில் கல்வி பயின்ற இவர், பிரித்தானியாவில் நீண்ட காலமாக சமூக சேவையாற்றினார்.

1980 களில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஓர் அங்கமான தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக் கழகத்துடன் இணைந்து ஆயிரக்கணக்கான இலங்கை அகதிகளுக்குப் பல்வேறு உதவிகளை அர்ப்பணிப்புடன் செயலாற்றினார்.

நியூஹாம் பகுதியில் முதல் ஒரு தமிழ் கவுன்சிலராக நீண்டகாலம் இருந்தார் என்கின்ற பெருமையும் இவரையே சாரும்.

அன்னாரின் மறைவுக்குத் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஐக்கிய இராச்சியக் கிளை இரங்கல் தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More