தென்னாபிரிக்காவுக்கு இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக சுற்றுப் பயணம் மேற்கொண்ட இலங்கை அணியினர் நேற்றிரவு நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இலங்கை ஏயர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான யுஎல் -1708 என்ற விமானத்தில் இவர்கள், தென்னாபிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் விமான நிலையத்திலிருந்து நேற்றிரவு 8.00 மணியளவில் மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இந்த சுற்றுப் பயணத்தில் இலங்கை அணி தான் எதிர்கொண்ட இரு போட்டிகளிலும் படு தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வணக்கம் இலண்டன் WHATSAPPநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW