செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு முதலாவது ரி-20: மேற்கிந்திய தீவுகளிடம் வீழ்ந்தது அவுஸ்ரேலியா!

முதலாவது ரி-20: மேற்கிந்திய தீவுகளிடம் வீழ்ந்தது அவுஸ்ரேலியா!

1 minutes read

அவுஸ்ரேலியா அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 18 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், 1-0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி முன்னிலைப் பெற்றுள்ளது.

சென். லூஸியா மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 145 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஆந்ரே ரஸ்ஸல் 51 ஓட்டங்களையும் லெண்ட்ல் சிமோன்ஸ் 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அவுஸ்ரேலியா அணியின் பந்துவீச்சில், ஜோஸ் ஹசில்வுட் 3 விக்கெட்டுகளையும் மிட்செல் மார்ஷ் 2 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 146 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அவுஸ்ரேலியா அணி, 16 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 18 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மிட்செல் மார்ஷ் 51 ஓட்டங்களையும் மத்தியூ வேட் 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், ஒபேட் மெக்கொய் 4 விக்கெட்டுகளையும் ஹெய்டன் வோல்ஷ் 3 விக்கெட்டுகளையும் பெபியன் அலென் 2 விக்கெட்டுகளையும் ஆந்ரே ரஸ்ஸல் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், 4 ஓவர்கள் வீசி 26 ஓட்டங்களை விட்டுக்கொடுத்த 4 விக்கெட்டுகளை ஒபேட் மெக்கொய் தெரிவுசெய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி-20 போட்டி, இன்று (சனிக்கிழமை) சென். லூஸியா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More