செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐ.பி.எல். நாளை ஆரம்பம்!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐ.பி.எல். நாளை ஆரம்பம்!

1 minutes read

கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல். ரி-20 லீக் தொடர், இரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பமாகவுள்ளது.

ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரின் 14ஆவது அத்தியாயத்தின் இரண்டாம் பகுதி போட்டிகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் நடைபெறுகிறது.

இந்த நிலையில் இதன் மூதல் லீக் போட்டியில், நடப்பு சம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் விளையாடவுள்ளன.

இதில் மும்பை அணிக்கு ரோஹித் சர்மாவும் சென்னை அணிக்கு டோனியும் தலைமை தாங்கவுள்ளன.

இதனிடையே சென்னை அணியின் வெளிநாட்டு வீரர்களான டு பிளெஸிஸ் உபாதைக் காரணமாக நாளைய போட்டியில் விளையாடுவது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது. அத்துடன் சேம் கர்ரன் தனிமைப்படுத்தலில் இருப்பதால் இப்போட்டியை தவறவிடுவார்.

31 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், டெல்லி கெபிடல்ஸ் அணி புள்ளிபட்டியலில் முதலிடத்தில் உள்ளது. சென்னை அணி இரண்டாவது இடத்திலும் பெங்களூர் அணி மூன்றாவது இடத்திலும் உள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More