செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு ஐ.பி.எல்.: ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் டெல்லி அணி அபார வெற்றி!

ஐ.பி.எல்.: ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் டெல்லி அணி அபார வெற்றி!

1 minutes read

ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரின் 33ஆவது லீக் போட்டியில், டெல்லி கெபிடல்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது.

டுபாயில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், டெல்லி கெபிடல்ஸ் அணியும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சன்ரைசஸ் ஹைதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசஸ் ஹைதராபாத் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 134 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, அப்துல் சமாட் 28 ஓட்டங்களையும் ரஷித் கான் 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

டெல்லி அணியின் பந்துவீச்சில், ரபாடா 3 விக்கெட்டுகளையும் நோட்ஜே மற்றும் அக்ஸர் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 135 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய டெல்லி கெபிடல்ஸ் அணி, 17.5 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் டெல்லி அணி 8 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஸ்ரேயஸ் ஐயர் ஆட்டமிழக்காது 47 ஓட்டங்களையும் ஷிகர் தாவன் 42 ஓட்டங்களையும் ரிஷப் பந்த் ஆட்டமிழக்காது 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ஹைதராபாத் அணியின் பந்துவீச்சில், காலீல் அஹமட் மற்றும் ரஷித் கான் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக டெல்லி அணி சார்பில், 2 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹென்ரிச் நோட்ஜே தெரிவுசெய்யப்பட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More