செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு உலகக் கிண்ணத்துக்காக இன்று நாட்டிலிருந்து புறப்படும் இலங்கை அணி

உலகக் கிண்ணத்துக்காக இன்று நாட்டிலிருந்து புறப்படும் இலங்கை அணி

1 minutes read

2021 டி-20 உலகக் கிண்ணம் மற்றும் ஓமானுடனான இரு போட்டிகளில் பங்கெடுப்பதற்காக தசூன் சானக்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணியானது இன்றைய தினம் நாட்டிலிருந்து புறப்படவுள்ளது.

Image

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் ஒக்டோபர் 17 ஆம் திகதி ஆரம்பமாகும் இருபதுக்கு ; 20 உலகக் கிண்ணத்துக்கு முன்னதாக இலங்கை அணி, ஓமான் கிரிக்கெட் அணியுடன் இரு டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

அதன்படி இலங்கை ஓமானனுடன் தனது முதல் போட்டியை ஒக்டோபர் 07 ஆம் திகதியும், இரண்டாவது போட்டியை 09 ஆம் திதியும் விளையாடுகிறது.

போட்டிகளின் பின்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு இலங்கை அணி திரும்பும். 

உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டிகளுக்கு முன், இலங்கை அணி பங்களாதேஷ் மற்றும் பப்புவா நியூ கினியாவுக்கு எதிராக இரண்டு பயிற்சிப் போட்டிகளில் விளையாடும்.

இந்தியாவுக்கு எதிரான டி-20 தொடரை வென்ற போதிலும், இலங்கை அணி தென்னாபிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரை முழுமையாக இழந்தது.

இந் நிலையில் தோல்வியடைந்த மனநிலையுடன் உலக கிண்ணத்துக்கான கனவுடன் இன்றைய தினம் நாட்டிலிருந்து புறப்படவுள்ளது இலங்கை அணி.

எனினும் தென்னாபிரிக்காவுடனான தொடரில் செய்த தவறுகளை சரிசெய்து உலக கிண்ணத்துக்கான சவாலுக்கு தயாரா இருப்பதாக இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கூறியுள்ளார்.

ஓமான் புறப்படுவதற்கு முன்னதாக இலங்கை அணி உலக கிண்ணத்தை இலக்காகக் கொண்ட ஒன்பது நாள் பயிற்சி முகாமில் பங்கேற்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More