செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் லங்கா பிரீமியர் லீக் | 699 பேர் விண்ணப்பம்

லங்கா பிரீமியர் லீக் | 699 பேர் விண்ணப்பம்

1 minutes read

எதிர்வரும் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ள லங்கா பிரீமியர் லீக் டி20 போட்டித் தொடரில் பங்கேற்பதற்காக 699 பேர் விண்ணப்பித்துள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இப்போட்டித் தொடருக்காக விண்ணப்பித்த699 பேரில் ‍தெரிவு ‍செய்யப்படும் 225 வீரர்களை வகைப்படுத்தும் ‘வீரர்கள் வரைபு’ (player draft)  எதிர்வரும் ஒக்டோபர் 29 ஆம் திகதியன்று ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும். 

இப்போட்டித் தொடரில் பங்கேற்கும் குறித்தவொரு அணி அதிகபட்சமாக 6 வெளிநாட்டு வீரர்களை எடுத்துக்கொள்ள முடிவதுடன், விளையாடும் பதினொருவரில் அதிகபட்சமாக 4 வெளிநாட்டு வீரர்களை பங்கேற்கச் செய்ய முடியும். 

இந்த போட்டித் தொடரில் பங்கேற்பதற்காக நட்சத்திர வீரர்களான கிறிஸ் கெய்ல், அண்ட்ரே ரசல், டேவிட் மாலன், பாவ் டு பிளெஸ்ஸிஸ், இம்ரான் தாஹிர், ஷயிட் அப்ரிடி உள்ளிட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

மேலும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான இர்பான் பத்தான், யூசுப் பத்தான், மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ் கெய்ல், சகலதுறை வீரர் அண்ட்ரே ரசல், டுவெய்ன் ஸ்மித்,  இங்கிலாந்தின் லூக் ரைட், லியம் பிளங்கெட், ஸ்டீபன் பின், ஆதில் ரஷீட், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர்களான பகார் சமான், நியூஸிலாந்தின் மிச்செல் மெக்லனகன், ஸிம்பாப்வேயின் சிகந்தர் ராசா உள்ளிட்ட சர்வதேச மற்றும் உள்ளூர் வீரர்கள் இப்போட்டித் தொடரில் பங்கேற்பதற்காக விண்ணப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More