செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு வெற்றி யாருக்கு? இந்தியா- தென்னாபிரிக்கா முதல் டெஸ்டின் இறுதிநாள் ஆட்டம் இன்று!

வெற்றி யாருக்கு? இந்தியா- தென்னாபிரிக்கா முதல் டெஸ்டின் இறுதிநாள் ஆட்டம் இன்று!

2 minutes read

இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், நான்காம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி நேற்றைய நான்காம் நாள் ஆட்டநேர முடிவில், இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் தென்னாபிரிக்கா அணி, 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 94 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஆட்டநேர முடிவில், டீன் எல்கர் 52 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தார்.

சென்சூரியனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியக் கிரிக்கெட் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 327 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கே.எல். ராகுல் 123 ஓட்டங்களையும் மாயங் அகர்வால் 60 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், லுங்கி ங்கிடி 6 விக்கெட்டுகளையும் ரபாடா 3 விக்கெட்டுகளையும் மார்கோ ஜென்ஸன் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாபிரிக்கா அணி, 197 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டெம்பா பவுமா 52 ஓட்டங்களையும் குயிண்டன் டி கொக் 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மொஹமட் ஷமி 5 விக்கெட்டுகளையும் பும்ரா மற்றும் தாகூர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சிராஜ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 130 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்தியக் கிரிக்கெட் அணி, 174 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிக்கு 305 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரிஷப் பந்த் 34 ஓட்டங்களையும் கே.எல். ராகுல் 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ரபாடா மற்றும் மார்கோ ஜென்ஸன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளையும் லுங்கி ங்கிடி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 305 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி, நேற்றைய நான்காம் நாள் ஆட்டநேர முடிவில், 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 94 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இன்னமும் 6 விக்கெட்டுகள் மற்றும் ஒருநாள் மீதமிருக்க 211 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி, இன்றைய இறுதிநாள் ஆட்டத்தில் தென்னாபிரிக்கா அணி, துடுப்பெடுத்தாடவுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More