செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு உலகின் முதல்நிலை வீரர் ஜோகோவிச்சின் விசாவை இரத்துச் செய்தது அவுஸ்ரேலியா!

உலகின் முதல்நிலை வீரர் ஜோகோவிச்சின் விசாவை இரத்துச் செய்தது அவுஸ்ரேலியா!

2 minutes read

ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் பங்கேற்க இருந்த உலகின் முதல்நிலை வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சின், விசாவை அவுஸ்ரேலிய அரசாங்கம் இரத்து செய்துள்ளது.

இம்மாத நடுப்பகுதியில் ஆரம்பமாகவுள்ள அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் பங்கேற்க, ஜோகோவிச் விமானம் மூலம் மெல்பேர்னின் துல்லாமரைன் விமான நிலையத்தை நேற்று (புதன்கிழமை) இரவு வந்தடைந்தார்.

மருத்துவ விலக்குகளை அனுமதிக்காத விசாவிற்கு அவரது குழு விண்ணப்பித்திருப்பது தெரியவந்த பிறகு, அவுஸ்ரேலியாவிற்குள் நுழைய அனுமதிக்காகக் அவர் காத்திருந்தார்.

ஆனால், அவரை அவுஸ்ரேலியாவிற்குள் நுழைய விமான நிலைய அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை சுட்டிக் காட்டி அவருக்கான அனுமதி மறுக்கப்பட்டது.

அவுஸ்ரேலியாவிற்குள் நுழைய தேவையான பூர்த்தி செய்த ஆதாரங்களை வழங்க தவறியதால் ஜோகோவிச் விசா இரத்துச் செய்யப்பட்டதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் கிரெக் ஹன்ட் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இரவு முழுவதும் மெல்பேர்ன் விமான நிலையத்தில் நோவாக் ஜோகோவிச் சிக்கித் தவித்தார்.

இந்த பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று போட்டி அமைப்பு குழுவினரும், அந்த நாட்டு அரசாங்க அதிகாரிகளும் உத்தரவிட்டுள்ளனர்.

எனினும் 9 முறை அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் சம்பியன் பட்டத்தை வென்றவருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டாரா? இல்லையா? என்பது குறித்து தெரிவிக்க தொடர்ந்து மறுத்து வந்தார்.

இதனால் அவுஸ்ரேலிய ஓபனில் அவர் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டது. அவர் தொடரில் இருந்து விலகக்கூடும் என்றும் தகவல் வெளியாகின. இந்த நிலையில் அவருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் தனக்கு மருத்துவ விதிவிலக்கு கிடைத்து இருப்பதாகவும், இதனால் அவுஸ்ரேலியாவுக்கு கிளம்பி விட்டதாகவும் அவர் நேற்று டுவிட்டரில் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மோரிஸன் கூறுகையில், ‘அவுஸ்ரேலியாவுக்குள் நுழைய விரும்பும் யாராக இருந்தாலும் தேவையான கொரோனா தடுப்பு நடைமுறைகளை நிச்சயம் கடைப்பிடித்தாக வேண்டும். ஜோகோவிச் கொரோனா தடுப்பூசி போடாமல் இருந்தால், அதற்கான தகுதி வாய்ந்த மருத்துவ சான்றிதழை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்’ என கூறினார்.

ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர், எதிர்வரும் 17ஆம் திகதி மெல்பேர்னில் ஆரம்பமாகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More