செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் காயமடைந்த பானுக்க ராசபக்ச தொடர்ந்து விளையாடுவதில் சந்தேகம்?

காயமடைந்த பானுக்க ராசபக்ச தொடர்ந்து விளையாடுவதில் சந்தேகம்?

0 minutes read

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிவரும் இலங்கையின் பானுக்க ராஜபக்ச காயம் அடைந்துள்ளதால் எதிர்வரும் போட்டிகளில் விளையாடுவதில் சந்தேகம் நிலவுகிறது.

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கெதிராக நேற்றைய தினம் (5) நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியிருந்தது. 3 ஆம் இலக்க துடுப்பாட்ட வீரராக களம் புகுந்த பானுக்க ராஜபக்ச 3 பந்துகளுக்கு 1 ஓட்டத்தை மாத்திரம் பெற்று பந்துவீச்சாளர் முனையில் இருந்தவேளையில்,  துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த ஷிகர் தவான் ஓங்கி அடித்த பந்து பானுக்கவின் கையில் பலமாக பட்டது. இதன்போது காயத்தை தாங்க முடியாது அரங்கு திரும்பியதுடன், மீண்டும் துடுப்பெடுத்தாட வரவில்லை.

எவ்வாறாயினும், அவரது காயம் தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வ அறிக்கை எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இப்போட்டியில், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை 5 ஓட்டங்களால் இறுக்கமான வெற்றியை பஞ்சாப் கிங்ஸ் அணி வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More