செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு கிரிக்கெட் கௌன்சிலின் பிரதித் தலைவர் இலங்கை வருகிறார்

கிரிக்கெட் கௌன்சிலின் பிரதித் தலைவர் இலங்கை வருகிறார்

0 minutes read

சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலின் பிரதித் தலைவர் இம்ரான் க்வாஜா நாளை (09.05.2023) இலங்கை கிரிக்கெட்டில் அரசியல் தலையீடு பற்றிய குற்றச்சாட்டு குறித்த உண்மையைக் கண்டறிவதற்கு இலங்கை வரவிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

இதன்போது அவர் விளையாட்டுத் துறை அமைச்சர், இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் மற்றும் ஏனைய தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

அரசியல் தலையீடு குறித்து இலங்கை கிரிக்கெட் சபையிடம் இருந்து வந்த தொடர்ச்சியான முறைப்பாட்டை அடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை செயலாளர் ஜெய் ஷா தலைமையிலான மூவர் கொண்ட குழுவை ஐ.சி.சி நியமித்ததாக கூறப்படுகிறது.

இதில் க்வாஜா மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தலைவர் நஸ்முல் ஹசனும் உள்ளடங்குகிறார்கள். இந்த நியமனத்தை அடுத்து இந்த விடயம் பற்றி பேச சந்திப்பு ஒன்றை கோரி விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஐ.சி.சி தலைவர் கிரே பார்க்ளேவுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More