செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு Icc தகுதி காண் சுற்று இன்று

Icc தகுதி காண் சுற்று இன்று

1 minutes read

ஸிம்பாப்வேயில் இன்று (18)இந்தியாவில்  அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள 13ஆவது Icc  உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு   தகுதிபெறப் போகும்  கடைசி இரண்டு அணிகள் எவை என்பதைத் தீர்மானிக்கும் தகுதிகாண் சுற்று ஆரம்பமாகவுள்ளது.

உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இது கடைசி தகுதிகாண் சுற்றாக அமையும் என கருதப்படுகிறது.

ஏனெனில் 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 14 நாடுகள் பங்குபற்றவுள்ளன.

ஆனால், இம் முறை முதல் சுற்று, சுப்பர் 6 என இரண்டு சுற்றுகளைக் கொண்டதாக உலகக் கிண்ண தகுதிகாண் சுற்று அமைவதால் இந்த இரண்டு அணிகளும் அழுத்தங்களை எதிர்கொள்ளும் என கருதப்படுகிறது.

உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெறத் தவறினால் அது மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இலங்கைக்கும் பெரும் பின்னடைவாக அமையும்.

எனவே இந்தத் தகுதிகாண் சுற்றில் என்ன விலை கொடுத்தேனும் இறுதிப் போட்டிவரை முன்னெறி உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெற இலங்கையும் மேற்கிந்தியத் தீவுகளும் முயற்சிக்கும் என நம்பப்படுகிறது.

இந்த இரண்டு நாடுகளுக்கு சவால் விடுக்கக்கூடிய அணிகளாக ஸிம்பாப்வேயும் அயர்லாந்தும் திகழ்கின்றன.

இந்த நான்கு அணிகளைவிட சர்வதேச கிரிக்கெட் பேரவையில் இணை உறுப்பு நாடுகளாக அங்கம் வகிக்கும் நேபாளம், நெதர்லாந்து, ஓமான், ஸ்கொட்லாந்து, ஐக்கிய அரபு இராச்சியம், ஐக்கிய அமெரிக்க ஆகிய நாடுகளும் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் விளையாடுகின்றன.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More