செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் மஹீஷ் தீக்சன உலகக் கிண்ண கிரிக்கெட் குழுவில் இடம்பெறுவது உறுதி

மஹீஷ் தீக்சன உலகக் கிண்ண கிரிக்கெட் குழுவில் இடம்பெறுவது உறுதி

0 minutes read

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளரான மஹீஷ் தீக்சன உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை கிரிக்கெட் குழாத்துடன் இணைந்து கொள்வதற்காக நேற்று புதன்கிழமை (04) இந்தியாவுக்கு பயணமானார்.

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின்போது உபாதைக்குள்ளான மஹீஷ் தீக்சனவால், ஆசிய கிண்ண இறுதிப் போட்டியிலும் பங்கேற்க முடியவில்லை. மருத்துவ ஆலோசனைகளை பின்பற்றி வந்திருந்த நிலையில், கடந்த 26 ஆம் திகதியன்று இந்தியாவுக்கு பயணமான இலங்கை குழாத்தினருடன்  மஹீஷ் தீக்சனவால் பயணிக்க முடியவில்லை.

தற்போது உபாதையிலிருந்து மீண்டு வந்துள்ள இவர், எதிர்வரும் 7 ஆம் திகதியன்று டெல்லியில் நடைபெறவுள்ள தென் ஆபிரிக்க  அணியுடனான முதலாவது போட்டியில் பங்கேற்பார் என குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை, காயத்திற்குள்ளாகியுள்ள துஷ்மன்த சமீர உலகக் கிண்ணத் தொடரின் நடுப்பகுதியில் இலங்கை குழாத்தினருடன் இணைந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More