செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் உப்புல் தரங்கவுக்கு எதிராக பிடி ஆணை பிறப்பிப்பு

உப்புல் தரங்கவுக்கு எதிராக பிடி ஆணை பிறப்பிப்பு

0 minutes read

இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக் குழுத் தலைவர் உப்புல் தரங்கவுக்கு எதிராக மாத்தளை உயர்நீதிமன்றத்தினால் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணை ஒன்று தொடர்பாக நீதிமன்றத்தில் இன்றைய தினம் உப்புல் தரங்க ஆஜராகத் தவறியதாலேயே அவருக்கு எதிராக பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கண்டியில் நடைபெற்ற லெஜெண்ட்ஸ் லீக் சுற்றுப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக உப்புல் தரங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றுடன் தொடர்புபட்டதாக இந்த பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உப்புல் தரங்க தற்போது ஐக்கிய அமெரிக்காவில் நடைபெற்றுவரும் தொழில்முறை கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் விளையாடி வருகிறார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More