செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை இஸ்ரேல் இருப்பிடச் சிக்கல் | யூத தேசம் எங்கெல்லாம் உருவாக இருந்தன? | ஐங்கரன் விக்கினேஸ்வரா

இஸ்ரேல் இருப்பிடச் சிக்கல் | யூத தேசம் எங்கெல்லாம் உருவாக இருந்தன? | ஐங்கரன் விக்கினேஸ்வரா

6 minutes read

(இரண்டாம் போரின் முன்னர் ஐரோப்பாவில் குடிபுகுந்த யூதர்களைக் எப்படி அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவது என்பதில் ஒவ்வொரு நாடும் பெரும் ஆலோசனைகளில் ஈடுபட்டனர். வேறிடங்களில் குடியேற்றுவது பற்றி புதிய பல திட்டங்களை வகுத்தனர். அதனைப்பற்றி ஆராயும் வரலாற்றுப் பார்வையே இந்த அலசலாகும்)

ஐரோப்பாவில் யூதர்களைக் கண்டு வெறுப்படைந்த காலம் ஒன்று இருந்தது. குறிப்பாக முதலாம் – இரண்டாம் உலகப் போருக்கு முன்பாகவே இத்தகைய வெறுப்பு யூத மக்கள் மீது இருந்து என பல வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பாவில் குடிபுகுந்த யூதர்களைக் எப்படி அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவது என்பதில் ஒவ்வொரு நாடும் பெரும் ஆலோசனைகளில் ஈடுபட்டனர். வேறிடங்களில் குடியேற்றுவது பற்றி புதிய பல திட்டங்களை வகுத்தனர். அதனைப்பற்றி ஆராயும் வரலாற்றுப் பார்வையே இந்த ஆக்கமாகும்.
யூதர்களை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற பாலஸ்தீனர்!
ஐரோப்பாவில் இருந்து வெளியேற்றப்பட்ட யூதர்களை, பாலஸ்தீனியர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்கள். அங்கு பாலஸ்தீனம் சென்று கால்பதித்து மெல்ல மெல்ல அவர்களின் நிலங்களை அபகரித்து இன்றைக்கு பாலஸ்தீனர்கள் 10%த்திற்கு குறைவான நிலத்தில் வசித்து தங்களின் தாய்நாட்டை இழந்து நிற்கதியாய் இருக்கிறார்கள் என்பது காலக் கொடுமையாகும்.
அப்படி பாலஸ்தீனத்தில் யூத மக்கள் வந்திருக்காவிட்டால், வேறு என்ன திட்டங்கள் எல்லாம் இந்த உலக நாடுகள் அவர்களுக்காக வைத்திருந்தார்கள் என்பதைப் பற்றி ஆராயும் வரலாற்றுப் பார்வையே அலசலே இந்த ஆக்கம்.
இஸ்ரேலின் இருப்பிடச் சிக்கல் :
பாலஸ்தீனம் என்னும் தேசம் சரித்திர நியாயங்களின் அடிப்படையிலும், அம்மண்ணின் பூர்வீகக் குடிகள் என்கின்ற முறையிலும் பார்த்தால், கண்டிப்பாக அது பாலஸ்தீன அராபியர்களுக்கு உரியதுதான் என கூறினாலும், யூதர்களும் அந்த மண்ணின் பூர்வீகக் குடிகள் தான்.
யூதர்களும் அந்த மண்ணில் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்பே வந்தேறிகளாக வாழ வந்தவர்கள் தான். அராபிய இனம் மத்திய கிழக்கு நாடுகள் என்று சொல்லப்படும் நாடுகளான சிரியா, ஜோர்டான்,லெபனான், ஈராக், எகிப்து, ஈரான், சவுதி அரேபியா முழுக்க பரவி இருந்த இனம். அந்த இனம் பாலஸ்தீனிலும் பரவி இருந்தது.
அதனால் பாலஸ்தீன அராபியர்கள், அல்லது பாலஸ்தீன முஸ்லீம்கள் என்று அழைக்கப்பட்டவர்கள். அவர்கள் ஒரு காலத்திலும் பாலஸ்தீனை விட்டு வெளியேறியதில்லை.
1948ல் அவர்கள் தேசத்திற்குள், அவர்கள் அனுமதியின்றி ஐ.நா மற்றும் அமெரிக்கா, பிரிட்டன் துணையுடன் இஸ்ரேல் என்னும் தேசம் உருவானதாலும், அதனை முன்னிட்டு நடந்த போர்களினாலும் அகதிகளாக்கப்பட்டு சமீபத்தில் முழுமையாக நாடற்றவர்களாக வெளியேற்றப்பட்ட இனமாகி உள்ளனர்.
அமெரிக்காவின் யூத நாடு திட்டம்:
யூதர்களுக்கு ஒரு நாட்டை உருவாக்க வேண்டும் என 1825-ல் அமெரிக்காவின் நியூ யார்க்கில் உள்ள அரசியல்வாதியும் கதாசிரியருமான மோர்டியாக் மேனுவேல் நோஹ் 27 சதுர மைல் பரப்பளவு கொண்ட ஒரு தீவை வாங்கினார். எறாரத் (ARARAT- city of Refuge) என அந்தத் தீவிற்கு பெயர்சூட்டினார்.
இதனை அவர் யூதர்களுக்கான தாய்நாடாக மாற்றத் திட்டமிட்டார்.
அந்தத் தீவில் ஒரு பெரும் கல்வெட்டையும் நிறுவினார். அமெரிக்கா சுதந்திரம் பெற்ற 50வது ஆண்டில் இதை ஒரு சாதனையாக அறிவிக்க அவர் முனைந்தார். ஆனால் இந்த யோசனையை யாரும் செவிமடுக்கவில்லை என்பதால் அவர் திட்டத்தைக் கைவிட்டார். ஆனால் அவர் நிறுவிய கல்வெட்டு இன்றைக்கும் அங்கே உள்ளது.
உகாண்டாவில் யூத  நாடு:
பிரித்தானிய எழுத்தாளர் ஜோசப் சாம்பேர்லென் (Joseph Chamberlain)அவர்களின் காணியாகத் திகழ்ந்த கிழக்கு ஆப்பிரிக்காவின் ஒரு பகுதியை யூதர்களுக்கான தாயகமாக மாற்றத் திட்டமிட்டார். இந்தத் திட்டத்தை அவர் 1903-ல் பேசலில் நடைபெற்ற ஆறாவது சர்வதேச யூதர்கள் மாநாட்டில் அறிவித்தார்.
ஐரோப்பா முழுவதும் யூதர்களுக்கு எதிராக பெருகி வரும் எதிர்ப்பலைகளை சுட்டிக்காட்டி இதிலிருந்து தப்பிக்க விரைவில் ஒரு பாதுகாப்பான இடத்தை நாம் தேர்வு செய்தாக வேண்டும் என அவர் வற்புறுத்தினார். இதனை தியோடர் ஹெர்சலே ஒரு தற்காலிகத் தீர்வாக ஒப்புக்கொண்டார். பிரிட்டன் உகாண்டாவில் 5000 சதுர கிலோ மீட்டர் நிலத்தை ஒதுக்கவும் ஒப்புக் கொண்டது.
1904-ல் ஒரு பெரும் குழு இதனை ஆய்வு செய்ய அங்கே பயணித்தது. ஆனால் 1905-ல் ஆப்பிரிக்காவில் ஒரு யூத தாயகத்தை ஏற்படுத்துவது முதல் மாநாட்டின் தீர்மானங்களில் இல்லை என்பதால் இதனை ஏற்க இயலாது என பெரும் எதிர்ப்புகள் கிளம்பின.
 
யூதர்கள் ரஷ்யாவுக்கு குடிபெயர்வு :
சிலுவைப்போரில் பின் அமைந்த இஸ்லாமிய பேரரசு அதாவது துருக்கியை தலைமையிடமாக கொண்டு எகிப்து ஈராக் சிரியா ஜோர்டான் லெபனான் ஆகியவற்றை உள்ளடக்கிய ஓட்டோமான் பேரரசு மீண்டும் யூதர்களை மீள் குடியேற்றம் செய்தது.
ஆயினும் அச்சத்தால், பெரும்பாலான யூதர்கள் ரஷ்யாவுக்கு குடிபெயர்ந்தார்கள். ரஷ்யாவுக்கு அதனுடைய அண்டை நாடு லிதுவேனியா எல்லை பிரச்னை இருந்தது. தங்களுக்கென தனி நாடு அமைக்கும் எண்ணத்தில் இருந்த யூதர்கள் அதன் எல்லைப்பகுதி நிலங்களை ரஷ்ய அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுத்து வாங்கி குவிக்கத் தொடங்கினர்.
அப்போது ரஷ்யப் பேரரசர் அலெக்சாண்டர் II கொல்லப்படவே அது யூதர்களின் சதியாக இருக்கலாம் என்று சந்தேகப்பட்ட ரஷ்ய அதிகாரிகள் யூதர்களை நாட்டை விட்டு விரட்டினார்கள். 150 ஆண்டுகளுக்கு முன் ரஷ்யாவை விட்டு விரட்டப்பட்ட யூதர்களில் பலர் மீண்டும் துருக்கி பேரரசில் குடியேறினார்கள்.
போலந்து,லிதுவேனியா,இங்கிலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய நாடுகளில் குடியேறியிருந்தார்கள். பெரும்பாலான யூதர்கள் ஜெர்மனியில் குடியேறியிருந்தார்கள். யூதர்களின் நிதி ஆளுமை நடவடிக்கை காரணமாக 50,000 யூதர்கள் லிதுவேனியாவில் கொல்லப்பட்டார்கள்.
கிழக்கு ரஷ்யாவில் யூத தேசம் ?
யூதர்களின் எண்ணிக்கை படு வேகமாக வளர்ந்துவருவதை ரஷ்யா ஒரு நெருக்கடியாகப் பார்த்தது. அதனால் இதனைக் கட்டுப்படுத்த அவர்களுக்கு என்று ஒரு தனித்த நிலப்பகுதியை ஏற்படுத்த அவர்கள் முடிவு செய்தனர்.
ரஷ்யா அங்கே சுயாட்சியுடன் கூடிய ஒரு சோசலிச வாழ்க்கையை அளிக்கலாம் என்றும், ஆனால் தேசிய அளவில் அவர்கள் ரஷ்யாவின் ஒரு பகுதியாகவே இருப்பார்கள் என்றும் அறிவித்தது.
கிழக்கு ரஷ்யாவில் சீனாவில் எல்லை அருகில் அவர்களுக்கு ஒரு நிலப்பரப்பையும் அவர்கள் இதற்காக ஒதுக்கினார்கள். இதுதான் பிரோபித்சான் (Birobidzhan) பகுதி ஆகும். கடும் குளிர் பிரதேசமாக இந்தப் பகுதி இருந்தது. அங்கே யூதர்கள் மெல்ல மெல்ல குடியேறினார்கள். ஒரு கட்டத்தில் அந்தப் பகுதியில் 16% பேர் யூதர்களாக வசித்தார்கள். ஆனால் தட்பவெப்பமும் காலமும் ஒத்துழைக்காததால் மெல்ல மெல்ல அங்கிருந்து பல ஊர்களுக்கு இடம்பெயர்ந்தார்கள்.
யூதர்களை ஜப்பானில் குடியேற்றம்?
1934-ல் ஜப்பான் மன்னர் ஒரு திட்டத்தை அறிவித்தார். இதற்கு புகு திட்டம் (Fugu plan) என பெயர் சூட்டினார். யூதர்களை ஜப்பானில் குடியேற்றம் செய்தால் தன் வழியே ஜப்பானிற்கு பொருளாதார ரீதியில் பல நன்மைகள் ஏற்படும் என அவர் நம்பினார்.
6 லட்சம் பேரை குடியேற்றம் செய்யும் அளவிற்கு அவர்கள் பெரும் திட்டங்களை வகுத்தார்கள். ஆனால் யூதர்கள் ஆபத்தானவரக்ள் என்கிற பயம் ஜப்பானியர்கள் மத்தியில் கடுமையாக இருந்தது. யூதர்கள் அமெரிக்காவிற்கு ஆதரவாகவே நிற்பார்கள், அது ஜப்பானுக்கு ஆபத்தாகவே முடியும் என்று அரசியல் நிபுணர்கள் தெரிவிக்க இந்தத் திட்டத்தை கைவிட்டார்கள்.
ஜெர்மனியில் பல லட்சம் யூதர்கள் கொலை :
முதல் உலகப்போருக்கு முன் நடந்த போர்களில் இங்கிலாந்து ஜெர்மன் ஆகிய நாடுகளில் யூத ராணுவப்பிரிவு இருந்தன. முதல் உலகப்போரில் இங்கிலாந்து ரஷ்யா பிரான்ஸ் ஒரு பக்கமும் ஜெர்மனி ஆஸ்திரியா இத்தாலி துருக்கி மறு பக்கமுமாக போரிட்டன.
ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சியில் முதல் உலகப்போரின் தோல்விக்கு ஜெர்மனியர்கள் தான் என்றும், ஐரோப்பாவின் வறுமைக்கும் காரணம் யூதர்கள் தான் என்று யூதர்களை வேட்டையாடினார். கிட்டத்தட்ட அறுபது லட்சம் யூதர்கள் கொல்லபட்டனர்.
ஜெர்மனி தான் வென்ற நாடுகளான பெல்ஜியம், போலந்து, பிரான்ஸ் நார்வே ஸ்வீடன் ஆகிய நாடுகளில் உள்ள யூதர்களை தேடித்தேடி கொன்றது.
ஜெர்மனி யூதரை மடகாஸ்கரில் குடியேற்ற முயற்சி :
1940 ஜூன் மாதம் ஜெர்மானியர்கள் ஒரு திட்டத்தைத் தீட்டினார்கள். அதாவது ஐரோப்பா முழுவதிலும் உள்ள யூதர்களை அங்கிருந்து அப்படியே வெளியேற்றி, அவர்களை ஆப்பிரிக்கா அருகில் இருக்கும் மடகாஸ்கர் தீவில் குடியமற்றுவது என்பது தான் அந்தத் திட்டம்.
பிரான்ஸ் நாட்டை ஜெர்மனி கைப்பற்றிய நிலையில் பிரான்ஸ் வசம் இருந்த இந்தத் தீவை அப்படியே இந்தத் திட்டத்திற்கு பாவிப்பது என முடிவு செய்தார்கள். அடுத்து பிரிட்டனை வென்று, யூதர்களை ஐரோப்பாவில் இருந்து வெளியேற்ற பிரிட்டனிடம் உள்ள பெரிய கப்பல்களை பாவிப்பது என்றும் தீர்மானித்தார்கள்.
ஒரு வருடத்திற்கு பத்து லட்சம் யூதர்கள் என்கிற கணக்கில் நான்கு வருடங்களில் ஐரோப்பாவில் யூதர்களே இல்லாமல் பார்த்துக் கொள்வது என்பதும் அவர்களின் முழு இலக்காக இருந்தது. ஆனால் போரில் பிரிட்டனை ஜெர்மானியர்கள் வீழ்த்த முடியவில்லை என்பதால் இந்தத் திட்டத்தை கைவிட்டார்கள்.
இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஜெர்மனி தோற்றது. இங்கிலாந்து பாலஸ்தீனத்தில் கொஞ்சம் கொஞ்சமாக குடியேறியிருந்த யூதர்கள் பகுதியை பிரித்து இஸ்ரேல் என்ற தனிநாடாக அறிவித்தது.
பூங்கொத்து கொடுத்தவர்க்கு குண்டுமழை பரிசா ?
 
இங்கிலாந்து தான் வென்றால் துருக்கியின் கட்டுபாட்டிலிருந்து எகிப்து சிரியா ஜோர்டான் லெபனான் இராக் ஆகியவற்றை விடுவிப்பதாகவும் இஸ்ரேலை மீண்டும் உருவாக்கி யூதர்களுக்கு தனிநாடாக அளிப்பதாகவும் அறிவித்தது. போரில் ஜெர்மனி தோற்றதால் துருக்கியிலிருந்து பல நாடுகள் சுதந்திர நாடுகளாக வெளியேறின.
இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் பாலஸ்தீனமும் சுதந்திரமடைந்தது. அப்போது இஸ்ரேல் தோன்றவில்லை. ஜெருசலேத்தை மட்டும் பிரிட்டன் தன் கையில் தக்க வைத்துக் கொண்டது.
ஐரோப்பாவில் இருந்து, இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் யூதர்களின் கப்பல் பாலஸ்தீன துறைமுகத்தை நெருங்கி போது அதில் இருந்தவர்கள் ஒரு பெரும் பதாகையை ஏந்தி வந்தார்கள் “”The Germans destroyed our families and homes – don’t you destroy our hopes” அதாவது ஜெர்மானியர்கள் எங்கள் குடும்பங்களை வீடுகளை அழித்துவிட்டார்கள், நீங்கள் எங்கள் நம்பிக்கையை அழித்துவிடாதீர்கள் என்றது அந்த பதாகை.
யூதர்கள் ஹிட்லரின் கொடுங்கோன்மையின் கீழ், ஹிட்லரின் ராணுவத்தின் பிடியில் சிக்கிச் சீரழிந்தது கண்டு உலகே கவலையுற்றது. ஹிட்லரைச் சாடியது, வரலாறு ஹிட்லரை ஒரு போதும் மன்னிக்காது.
யூதர்களை அங்கே சென்று இறக்கி விட்டு விட்டு மெல்ல இந்த விசயத்தில் தங்களின் கைகளை கழுவிக் கொண்டது இங்கிலாந்து. இனி இது எங்கள் பிரச்சனை இல்லை ஐநா பார்த்துக்கொள்ளட்டும் என விலகிக் கொண்டார்கள்.
தற்போது பூங்கொத்து கொடுத்த பாலஸ்தீன மனிதர்களுக்கு பாஸ்பரஸ் குண்டுகளைப் பரிசாகக் கொடுக்கும் வரலாறு ஒரு போதும் மன்னிக்காது.அப்படி ஒரு பதாகையை ஏந்தி வந்தவர்கள் இன்று பாலஸ்தீனர்களின் தாயகத்தை நிர்மூலமாக்கி வருகிறார்கள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More