செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் லெபனான் முன்னாள் பிரதமர் ரஃபீக் ஹரிரி கொலை வழக்கு தீர்ப்பு

லெபனான் முன்னாள் பிரதமர் ரஃபீக் ஹரிரி கொலை வழக்கு தீர்ப்பு

1 minutes read

லெபனான் முன்னாள் பிரதமர் ரஃபீக் ஹரிரி, 2005ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த இரான் ஆதரவு பெற்ற ஹெஸ்போலா தீவிரவாத குழுவைச் சேர்ந்த நால்வரில் ஒருவர் குற்றவாளி என்று சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2015ஆம் ஆண்டு முதல், இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக ஹெஸ்போலா குழுவைச் சேர்ந்த சலீம் அய்யாஷ் மற்றும் மேலும் மூவருக்கு எதிரான வழக்கு, சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இன்று தீர்ப்பு அளித்த சர்வதேச நீதிமன்ற நீதிபதி, ரஃபீக் ஹரிரி உட்பட 22 பேர் கொல்லப்பட்டது மற்றும் 226 காயம் அடைந்த கார் தற்கொலை குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட அய்யாஷ் குற்றவாளி என்றும் அவர் தீவிரவாத செயல் புரிந்தார் என்பதும் நிரூபணமாவதாக தெரிவித்தார். குற்றம்சாட்டப்பட்ட மூவர், வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதாக சர்வதேச நீதிமன்றம் கூறியது.

அதே சமயம், ஹெஸ்போலா குழுவின் தலைமை அல்லது அதை ஆதரிக்கும் சிரியாவுக்கு நடந்த தாக்குதலில் தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் இல்லை என்று சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பில் கூறியது.

இந்த வழக்கில் மேலும் குற்றம்சாட்டப்பட்டிருந்த முஸ்தஃபா பத்ருதீன் என்ற ஹெஸ்போலா இயக்க ஆயுதப்பிரிவு தளபதி 2016இல் சிரியாவில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டதை அடுத்து, அவரது பெயர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது.

இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளி என்று சர்வதேச நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ள அய்யாஷ் மீது வெடிபொருட்களை பயன்படுத்தி தீவிரவாத செயல் புரிந்தது உள்ளிட்ட ஐந்து குற்றச்சாட்டுகள் பதிவாகியிருந்தன. பத்ருதீனுடன் இணைந்து செயல்பட்டு லெபனான் முன்னாள் பிரதமர் ரஃபீக் ஹரிரியை படுகொலை செய்ய ஒருங்கிணைந்து செயல்பட்டதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More